வேத காலம்

சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது.ஆரியரின் வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது.

வேதகாலம் - இந்திய வரலாற்றில் கி.மு. (பொ. ஆ. மு) 1500 - 600 காலகட்டம்.

‘வேதங்கள்’ என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.

ஆரியர்கள்:
ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் குடிபெயர்ந்து
இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர்.

கால்நடைகளை மேய்ப்பதே இவர்களின்
முதன்மைத் தொழில் என்றாலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும்(slash and burn Agriculture) .

புவியியல் பரப்பு - வட இந்தியா
காலப்பகுதி - இரும்புக் காலம்
கால அளவு-கி.மு (பொ.ஆ.மு) 1500-600 வரை
சான்றுகள் - வேதகால இலக்கியங்கள்
நகரத்தின் இயல்பு கிராம நாகரிகம்

ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்:

ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள்.
அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினர்

ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும்.

அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி

ஏறத்தாழ கி.மு.(பொ.ஆ.மு) 1000ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.

இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றைப் பரவலாக பயன்படுத்தினர்.

நான்கு வேதங்கள்: ரிக், யாஜுர், சாம, அதர்வன.

சான்றுகள்:

வேத கால இலக்கியங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. சுருதிகள் - நான்கு வேதங்கள்,பிராமணங்கள் , ஆரண்யங்கள் , உபநிடதங்கள்
  1. ஸ்மிருதிகள் - ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும்.
  2. அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மற்றவர்களுக்கு உள்ளாகுபவை.

    **ஸ்மிருதி’ என்பதன் பொருள் இறுதியான
    எழுதப்பட்ட பிரதி
    **ஆகும்.

இந்தியாவின் தேசிய குறிக்கோள்:

தொல்பொருள் சான்றுகள்:

சிந்து மற்றும் கங்கை நதிப்பகுதிகளிலும் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கருவிகள், மட்பாண்டங்கள் ஆகியன.

வேதகாலத்தை வகைப்படுத்துதல்:

  1. தொடக்க வேதகாலம் கி.மு.(பொ.ஆ.மு) 1500 - 1000
  2. பின் வேதகாலம் கி.மு.(பொ.ஆ.மு) 1000-600

வேதகால பண்பாடு:

அரசியலும், சமூகமும்:

அரசர்:

அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான
விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

இவைகளின் விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு) பழமையானதாகும்.

அரசர் தனக்கு உதவி செய்வதற்காக புரோகிதர் (தலைமை குரு) ஒருவரை பணியில் அமர்த்திக் கொண்டார்.

அரசியல், பொருளாதாரம், இராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு சேனானி (படை தளபதி) உதவி செய்தார்.

ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை, யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறிய போது தொடக்ககாலக் குடியேற்றங்கள் மாற்றம் பெற்று பிரதேச அரசுகளாயின.

பரம்பரை அரசுரிமை தோன்றியது. முடியாட்சி
முறையில் அரசனின் அதிகாரங்கள் அதிகரித்தன. அரசர் தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள பல சடங்குகளையும் யாகங்களையும் செய்தார்.

பின்வேதகாலத்தில் பல ஜனாக்கள் அல்லது
இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாகின.

சமிதி, சபா ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன.

விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது.
புதிய அரசுகள் தோன்றின.

பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கையாகும்.

பின்வேதகாலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.

குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் இது. மேலும் அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்களும் இக்காலத்தில் உருவாயின.

சபா - மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
சமிதி மக்கள் கொண்ட பொதுக்குழு.

பாலி இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.

சமூக அமைப்பு:

தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் மூன்று பிரிவுகள் காணப்பட்டன.

வர்ண அமைப்பு

பெண்களின் நிலை:

பொருளாதார வாழ்க்கை:

ரிக்வேதகால ஆரியர்களின் முதன்மைத் தொழில்கால்நடைகள் மேய்ப்பது என்றாலும் மரவேலை செய்வோரும், தேர்கள் செய்வோரும், மண்பாண்டங்கள் செய்வோரும், உலோக வேலை செய்பவரும், துணி நெய்வோரும், தோல்வேலை செய்பவர்களும் இருந்தனர்.

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.

குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள்,
செம்மறியாடுகள், காளைகள் மற்றும் நாய்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தப் பட்டன.

சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாக குடியேறியபின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினார்.

யவா (பார்லி) அவர்களின் முதன்மை பயிராகும்.

கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்கள் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக் வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடவில்லை.

ஒவ்வொரு வருடமும் இரு போகம் சாகுபடி
செய்யப்பட்டது.

பின்வேத காலத்தில் ஆரியர்கள் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.

தொடக்க வேத கால கைவினைஞர்களோடு நகை செய்வோர், சாயத்தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும்
சமூகத்தில் இடம் பெற்றிருந்தனர். இக்காலப் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று
அழைக்கப்படுகிறது.

இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடாரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான செய்யப்பட்டது.

நிலங்களின் வேளாண்மை
நெல், கோதுமை, பார்லி ஆகியன பயிர் செய்யப்பட்டன.

வேளாண்மை வளர்ச்சி பெற்றதால்
நிலத்தின் மீது தனியுரிமை உருவானது.

புதிய தொழில்களும், கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகத்துக்கு இட்டுச் சென்றன.

பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

உலோகங்கள்:

மதம்:

ரிக்வேத கால ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர்.

கல்வி: