தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் கப்பகம் (895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு)
யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு பென்யானைத்தான் தலைமைத் தாங்கும்.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்-மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
கரடி ஓர் அனைத்துண்ணி
புலி இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மையுடையது. அது தனித்து வாழும் தன்மையுடையது.
கருவுற்ற புலி 90 நாட்களில் 2 அல்லது 3 குட்டிகள் ஈனும்.
புலி தான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்பர்.
உலகில் ஆசியச்சிங்கம் அப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.
இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே சிறந்தவை என்பர்.