மூதுரை

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”

மூதுரை பற்றியக் குறிப்புகள்

“வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்” என்று இந்நூல் விநாயகர் வாழ்த்துடன் தொடங்குகிறது. (“தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வர் தமக்கு” எனப் பாடல் முடிகிறது) எளிமையான உவமைகளை எடுத்துக்காட்டி உயர்ந்த நீதியினைச் சொல்லும் நூல் - மூதுரை