- [[வானம்பாடி காலம்]] இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்
- மு. மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்;
- கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களை யும் எழுதியுள்ளார்;
- கல்லூரிப் பேராசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- இவர் எழுதிய [[ஆகாயத்துக்கு அடுத்த வீடு]] என்னும் புதுக்கவிதை நூலுக்குச் [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது.
*ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்! தூங்கி விழுந்தால்பூமி உனக்குப் படுக்கையாகிறது. விழித்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது! நீவிழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு! உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு! நட!நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட! * - மு.மேத்தா