ஆசிரியர் - சீத்தலைச் சாத்தனார்
- மதுரைக் கூலவாணிகன்
- சீத்தலை (திருச்சிராப்பள்ளி)
- 2 ஆம் நூற்றாண்டு
- தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்
நூல்
- 4755 அடிகள், 30 காதைகள்
- நிலைமண்டில ஆசிரியப்பா
- பௌத்தம்
- மணிமேகலை துறவு
நூலின் சிறப்பு பெயர்கள் :
-
மணிமேகலைத் துறவு மாதவியின்
மகளான மணிமேகலை இளமையிலேயே துறவு பூண்டதைக் கூறுவதால் -
அறக்காப்பியம் எக்காலத்திற்கும் ஏற்ற அறங்களை எடுத்துக் கூறுவதால்.
-
சீர்திருத்தக்காப்பியம்
பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பசி ஒழிப்பு, கொலை, களவு ஒழிப்பு முதலான சமுதாய சீர்திருத்தங்களைப் பேசுகின்றது. -
புரட்சிக்காப்பியம்
பரத்தையின் மகளை அறத்தின் தலைவியாகவும் துறவியாகவும்மாற்றிக் காட்டியுள்ளதால் -
கதைக் களஞ்சியக் காப்பியம் கிளைக் கதைகளை மிகுதியாகக் கூறுவதால்
-
பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
அமுதசுரபியைக் கொண்டு அனைவரின் பசிப்பிணியையும் போக்கியதால் -
பசுப்போற்றும் காப்பியம்
பசுவின் பெருமைகளை ஆபுத்திரன் மூலம் எடுத்துக் கூறுவதால் -
காந்த ஊசி பற்றி கூறும் நூல்
-
பல்லவர் கால மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது
பாடப் பகுதி
முதற் காதை : விழாவறை காதை
==ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்==
==காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்==
==பசியும் பிணியும் பகையும் நீங்கி==
==பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;==
==அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்==. ==மணிமேகலை 25: 228 - 231==
சிறப்புகள்
- இந்தியாவை நாவலந்தீவு எனக் குறிப்பிடும் நூல் மணிமேகலை.
- தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும்.
- உலகில் முதலில் தோன்றிய பெண் துறவி மணிமேகலை.
- சொற்சுவை, பொருட்சுவை, இயற்கை வருணைகள் நிறைந்த நூல் மணிமேகலை
- பாதத்தில் சகஸ்ர (அ) சக்கர ரேகை (1000) அமையப்பெற்றவர் புத்தர்,
- மணிமேகலையை விரும்பியவன் உதயகுமரன்.
- மணிமேகலையின் தோழி சுதமதி.
- மணிமேகலையை, மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு தூக்கிச் மூன்று வரங்களை அளித்தது. அங்கு அவள் பாதபீடிகையை வணங்கினாள்.
- தீவதிலகையின் உதவியால் அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைந்தவள்- மணிமேகலை
- அறவணவடிகளின் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதன் முதலில் அமுதசுரபியில் பிச்சை பெற்றவள்- மணிமேகலை
- அமுதசுரபி முற்பிறவியில் ஆபுத்திரனிடம் இருந்தது
- பேய் பெண்ணான காயசண்டிகையை அழகான பெண்ணாக மாற்றியவள் மணிமேகலை
- ஆபூத்திரன் நாடு அடைந்த காதை 24 காதை ஆகும்
- உலகின் 6 வகை உயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குகள், பேய்
- உடலில் தோன்றும் தீவினை கொலை, களவு, காமம்
- சொல்லில் தோன்றும் தீவினை பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல்
- மணிமேகலையில் கூறப்படும் பத்துகுற்றங்கள் கொலை, களவு, காமம், பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்றசொல், பேரவா, கடுஞ்சினம், தெளிவில்லா அறிவு
- சமயபூசலுக்கு வித்திட்ட தமிழின் இரண்டாம் காப்பிய நூல் மணிமேகலை
மேற்கோள்:
==நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
==
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா புத்தேள் உலப் புதல்வரும் தாரார் மிக்க அறவே விழுத்துணை ஆவது
வினையின் வந்தது வினைக்கு விளைவாவது
==உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே==
தேவியும் ஆயமும் சித்ராபதியும்
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்
==பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்== ==மணிமேகலை (காதை 1, அடி 16)==
கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.
==கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்==” .
==புனையா ஓவியம் புறம் போந்தன்ன==
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது
சிறைசெய்காதை: 135-138