காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்* (பா.எ.67)
- [[சேக்கிழார்]]
- இயற்பெயர் - அருண்மொழிதேவர்
- சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை தொகுத்து கூறுகிறது.
- இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி அடியார்க்கோர் பாடல்.
- இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அடியார்க்கோர் புராணம்.
- கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
- ‘பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தது
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி - பெரியபுராணம்
”உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்”
பெரியபுராணம்
தன்பொருநைப் புனல் நாடு - திருநெல்வேலி