தஞ்சை பெரிய கோவில்
- கி.பி. 1009-ல் கட்டிமுடிக்கப்பட்டது
- விமானம் 216 அடிகள் உயரம்.
- உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
- 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட நந்தி சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
கங்கை கொண்ட சோழபுரம்:
- கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
- இக்கோவிலின் உயரம் 55 மீட்டராகும்.
- இக்கோவிலின் கருவறை தஞ்சாவூர் பெரிய கோவிலின் கருவறையைப் போலவே இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
தாராசுரம்:
- கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் பிற்காலச் சோழர்களின் கோவில் உள்ளது.
- பேரழகுமிக்க கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்ட இக்கோவில் ஐராவதீஸ்வரருக்கு (இந்திரனின் யானை வழிப்பட்ட கடவுள்) படைத்தளிக்கப்பட்டதாகும்.
- சோழ அரசன் இரண்டாம் ராஜராஜன் இக்கோவிலைக் கட்டுவித்தார்.