அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான “துரை. மாணிக்கம்” என்பதை விடுத்துப் “பெருஞ்சித்திரன்” என்னும் புனைப்பெயரில் எழுதினார்.
- பிறந்த ஊர் சேலம் - சமுத்திரம்
- மாணவர் பருவத்தில் “குழந்தை ” என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார்.
- “அருணமணி” என்ற பெயரில் “மலர்க்காடு” என்ற கையெழுத்து ஏடு நடத்தினார்.
- 1950-ல் சேலம் மாநகராட்சிக் கல்லூரியில் படித்த போது [[தேவநேயப் பாவாணர்]] தமிழ்க் கற்றார்.
- 1959- தென்மொழி என்ற இதழைத் தொடங்கினார்.
- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் தூண்டுதலாக இருந்ததால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- வேலூர் சிறையில் இருந்த போது “ஐயை” என்ற காவியத்தின் முதல் பகுதியை எழுதினார்.
- சிறையிலிருந்து வந்து ” தமிழ்ச்சிட்டு ” என்ற இதழைத் தொடங்கினார்.
- 1972 ல் [[தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு]] நடத்தினார்
- [[தேவநேயப் பாவாணர்]] அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கினார்
- நெருக்கடிநிலை நடைமுறைக்கு வந்த போது சிறைப்பட்டார்.அப்போது “ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதினார்.
- பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 1979 ல் “[[கனிச்சாறு]] என்ற பெயரில் மூன்றுத் தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டார்.
- 1981 ல் உலகத்தமிழ் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- 1982 தமிழ்நிலம் என்ற ஏட்டைத் தொடங்கினார்.
இதழ்கள்
- தென்மொழி - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து
- தமிழ் சிட்டு - மாணவர்களுக்காக
- தமிழ் நிலம் - உலகத் தமிழின முன்னேற்ற கழகம்
நூல்கள்
- உலகியல் நூறு
- பாவியக்கொத்து
- கொய்யாக்கனி
- நூறாசிரியம்
- கனிச்சாறு(8) - தமிழ் உணர்வுப் பாடல்கள்
- எண்சுவை எண்பது
- மகபுகுவஞ்சி
- பள்ளிப்பறவைகள்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை - தமிழுக்கு கருவூலமாய் அமைந்த நூல்.
- அறுபருவத்திருக்கூத்து
- இட்ட சாபம் முட்டியது
- ஐயை
- கழுதை அழுத கதை
- தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- வாழ்வியல் முப்பது
பாடப் பகுதி
10th Unit 1
கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன
*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
*தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி -நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!