-
பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர்.
-
பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர்.
-
2 பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராகப் போற்றப்படுகிறார். அவர் தலையாலங்கானம் என்னுமிடத்தில் சேரர், சோழர், ஐந்து வேளிர்குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார்.
-
அவர் கொற்கையின் தலைவன் போற்றப்படுகின்றார்.
-
பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும்.
-
பாண்டிய அரசர்கள் பல நாணயங்கள், ஒரு புறத்தில் யானையின் வடிவத்தையும் மற்றொரு புறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன.
-
முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் விதமாக நாணயங்களை வெளியிட்டார்.
-
ஆட்சி புரிந்த அரச வம்சங்கள் கொண்டாடும்
முக்கியத்துவம் வாய்ந்த பாண்டியஅரசர்கள்: -
நெடியோன்
-
நன்மாறன்
-
முதுகுடுமிப் பெருவழுதி
-
நெடுஞ்செழியன்
-
கடுங்கோன் எனும் பாண்டிய அரசன் 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடமிருந்து பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார்.
-
அரிகேசரி மாறவர்மன் என்னும் வலிமை மிக்க முதல் பாண்டிய அரசர் கி.பி.642-ல் அரியணை ஏறினார். இவர் பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகாலத்தவராவார்.
-
சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது.
-
அரிகேசரிக்குப் பின்னர் பாண்டியர் அரசவம்சத்தின் மகத்தான மன்னான ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (756-815) ஆட்சிப் பொறுப்பேற்றார்.
-
வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
-
நெடுஞ்சடையன் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகப் பாண்டிய அரசை விரிவுபடுத்தினார்.
-
நெடுஞ்சடையனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் ஆகியோர் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் முதலாம் பராந்தகனின் கீழ் எழுச்சி பெற்ற சோழவம்சத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை.
முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் இரண்டாம் ராஜசிம்மன் 920-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். இவ்வாறு கடுங்கோனால் மீள்எழுச்சி பெற்ற பாண்டியர் ஆட்சி முடிவுற்றது.
பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி (1190- 1310):
- அதிராஜேந்திரனின் மறைவுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி பலவீனமடைந்தது.
- அதன் விளைவாகப் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக விளங்கினர்.
- தலைநகர் - மதுரை
- துறைமுகம் - காயல்
மார்க்கோபோலோ
- வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288, 1293) காயலுக்கு வருகைதந்தார்.
- பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார்.
- இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார்.
- தன்னுடைய பயணக் குறிப்புகளில் ‘சதி”
(உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.
சடையவர்மன் சுந்தர பாண்டியன்: (1251-1268)
-
இவருடைய ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவியிருந்தது.
-
மலைநாட்டுத் தலைவனான சேர அரசர் சுந்தர பாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கப்பம் கட்டச் சம்மதித்தார்.
-
சோழ அரசின் வீழ்ச்சியால் ஊக்கம் பெற்ற மாளவப் பகுதியின் அரசர் வீர சோமேஸ்வரர் சுந்தர பாண்டியனைப் போருக்கு அழைத்தார். கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில்
சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரரைத் தோற்கடித்தார். -
வடதமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், மேற்குத் தமிழகத்தில் ஆர்க்காடு, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநிலத் தலைவர்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவினார்.
-
சுந்தர பாண்டியனின் ஆட்சியின்போது இவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தனர். அவர்கள் விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன் ஆவார்.
-
சுந்தர பாண்டியனுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகரன் வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்து நாட்டிற்கு செழிப்பையும், அமைதியையும் நல்கினார்.
-
அவருக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அரசர் வீரபாண்டியனைக் கூட்டுஅரசராக நியமித்தார். அதனால் தந்தை மீது வெறுப்புற்ற சுந்தர பாண்டியன் தந்தையார் மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
-
தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில்
வீரபாண்டியன் வெற்றி பெற்றுத் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டார். தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்கு விரைந்து அலாவுதீன் கில்ஜியின் பாதுகாப்பில் அடைக்கலமானார். -
இதுவே மாலிக்கபூரின் படையெடுப்புக்கான வாய்ப்பை வழங்கியது. மாலிக்கபூரின் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பல அரசர்களால் பாண்டிய நாடு பிரித்துக்கொள்ளப்பட்டது.
-
மதுரையில் டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு உருவாக்கப்பட்டது.
அரசு:
- மதுரை பொதுமக்களால் “கூடல்” என்றே போற்றப்பட்டு வந்தது. மன்னர்கள் “கூடல் கோன்”, “கூடல் காவலன்” என மதிக்கப்பட்டனர்.
- ராணுவரீதியாக அண்டைநாடுகளைக் காட்டிலும் பாண்டியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதன் காரணம் அவர்களிடம் இருந்த குதிரைப் படைகளாகும்.
- அரசர், “மனு சாஸ்திரத்தின்படி” தான் ஆட்சி செய்வதாகக் கூறினார்.
- அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் “மங்கலம்” அல்லது ‘சதுர்வேதிமங்கலம்” எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர்.
- நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் “பூமி புத்திரர்” அல்லது “வேளாளர்” என விவரிக்கப்பட்டுள்ளனர்.
- வரலாற்று ரீதியாக அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களாகையால் அவர்கள் “நாட்டுமக்கள்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- இச்சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் “சித்திர மேழி பெரிய நாட்டார்” என அழைக்கப்பட்டது.
அரசு அதிகாரிகள்:
- அதிகாரிகளின் குழுவொன்று அரசரின் ஆணைகளை நடைமுறைப்படுத்தியது.
- பிரதம மந்திரி “உத்திர மந்திரி” என அழைக்கப்பட்டார்.
- முக்கிய வரலாற்று ஆளுமைகளான மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாரன்காரி ஆகியோர்கள் அமைச்சர்களாகப் பணியாற்றினர்.
- அரசுச் செயலகம் “எழுத்து மண்டபம்” என அழைக்கப்பட்டது.
- மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகள் “மாறன்- எயினன்”, “சாத்தன்-கணபதி”, “ஏனாதி-சாத்தன்”, “திற-திறன்”, ‘மூர்த்தி-எயினன்”, ஆகியோரும் மற்றவருமாவர். “பள்ளி-வேலன்”, “பராந்தகன்- பள்ளி-வேலன்”, “மாறன்-ஆதித்தன்”, “தென்னவன்- தமிழ்வேள்” ஆகியவை படைத்தளபதிகளின் பட்டங்களாகும்.
நிர்வாகப் பிரிவுகள்:
-
சோழநாட்டில் இருந்ததைப்போலவே • “பாண்டியநாடு” பல மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டிருந்தன. -
மண்டலங்கள் “வளநாடுகள்” என அழைக்கப்பட்டன.
-
வளநாடுகள் பல “நாடுகளாகவும்”, “கூற்றங்களாகவும்” பிரிக்கப்பட்டன.
-
நாடுகளை நிர்வகித்தவர்கள் “நாட்டார்” ஆவர்.
-
நாடுகளும் கூற்றங்களும் மங்கலம், நகரம், ஊர், குடி எனும் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தன.
கிராம நிர்வாகம்:
- திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்னும் ஊரில் உள்ள கி.பி. 800ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராம நிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது.
மதம்:
- பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினார். வேள்விக்குடிச்செப்பேடுகளும் ஏனைய பொறிப்பியல் சான்றுகளும் சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
- பாண்டியமன்னர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர்
- பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.
கோவில்கள்:
- இடைக்காலப் பாண்டியர்களும், பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் எதையும் நிர்ணயிக்கவில்லை.
- பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக்கல் தூண்கள் இடைக்காலப் பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாகும்.
- சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
- வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாண்டியர் பேராதரவு நல்கினர்.
வணிகம்:
- காயல் துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜாமலுதீன் எனும் அரேபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது. பாண்டிய அரசர்களுக்குக் குதிரைகள் எளிதாகக் கிடைப்பதற்கான வசதிகளை இந்நிறுவனம் செய்துகொடுத்தது.
- 13, 14ஆம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் மேலும் அதிகரித்தது. சம்பிரதாய விழாக்களுக்கும், போர்புரிவதற்கும் குதிரைகள் தேவைப்பட்டதால் அரசர்கள் குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் என்று மார்க்கோபோலோவும், வாசப்பும் குறிப்பிட்டுள்ளனர்.
- குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் “குதிரைச் செட்டிகள்” என அழைக்கப்பட்டனர்.
- வணிகப் பரிமாற்றங்கள் தங்க நாணயங்கள் மூலம் நடைபெற்றது.
- அவை காசு, கழஞ்சு, பொன் எனப் பலவாறு அழைக்கப்பட்டன.