-
பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக் கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
-
குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பல்லவ அரசர் [[மகேந்திரவர்ம பல்லவன்]] ஆவார்.
-
மண்டகப்பட்டிலுள்ள குடைவரைக் கோவிலே இவர் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவிலாகும்.
-
குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி.700 க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.
-
ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும், மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோவில்கள், பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மவர்மனால் எழுப்பப்பட்டவை ஆகும்.
-
[[ராஜசிம்மன்]] என்று அறியப்பட்ட பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தார்.
-
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் இரண்டாம் [[நந்திவர்மன்]] ஆல் கட்டப்பட்டது.
-
அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பாகும். இக்கருங்கல் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்டதாகும். 1984-ல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் ([[UNESCO]]) அங்கீகரிக்கப்பட்டது.
-
யாளி, சிங்கம், தாமரை மலர்
-
மாமல்லபுரச் சிற்பங்கள்
-
காஞ்சி கைலாசநாதர் கோவில்
-
காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில்
-
குடைவரைக் கோயில்
-
மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை