- கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டவர்கள் [[களப்பிரர்கள்]] எனவே இக்காலத்தை களப்பிரர் காலம் (அ) சங்கம் மருவியக் காலம் (அ) இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது.
- களப்பிரர்கள் [[பாலி]] மொழியினை ஆதரித்தனர்.
- தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந்தேக்கமும், மாற்றமும் ஏற்பட்டது. எனவே இதனை கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும், இருண்ட காலம் அழைத்தனர்.
- முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் அழகுடன் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.
பதினெண்கீழ்க் கணக்கு மரபுக் குறிப்பு
- பதினெண் - 18
- கீழ் - சிறிய (குறைந்த அடிகள்)
- கணக்கு - நூல், இலக்கியம், அறம்
- அடி அளவால் குறைந்து வரும் கீழ்க்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு உடையன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
- அம் - அழகு
- அம்மை = அழகுடன் இருப்பது.
_நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால் கடுகங்கோவை பழமொழி-மாமூலம் இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ் கணக்கு - வெண்பா
அடிநிமிர் பில்லாச் செய்யுட்டொகுதி அறம்பொருளின்பம் அடுக்கி யவ்வகைத் திறம்படவுரைப்பது கீழ்க் கணக்காகும்
[[பன்னிரு பாட்டியல்]]
நூல்கள்
| அறநூல்கள் | புலவர்கள் |
|---|---|
| [[நாலடியார்|நாலடியார்]] | [[சமணமுனிகள்]] |
| [[நான்மணிக்கடிகை]] | [[விளம்பிநாகனார்]] |
| [[இன்னா நாற்பது]] | [[கபிலர்]] |
| [[இனியவை நாற்பது]] | [[பூதஞ்சேந்தனார்]] |
| [[திரிகடுகம்]] | [[நல்லாதனார்]] |
| [[ஆசாரக்கோவை]] | [[பெருவாயிற்முள்ளியார்]] |
| [[பழமொழி நானூறு]] | [[மூன்றுறை அரையனார்]] |
| [[சிறு பஞ்ச மூலம்]] | [[காரியாசான்]] |
| [[ஏலாதி]] | [[கணிமேதாவியார்]] |
| [[முதுமொழிக் காஞ்சி]] | [[கூடலூர்க்கிழார்]] |
| [[திருக்குறள்]] | [[திருவள்ளுவர்]] |
| அகநூல் | புலவர்கள் |
| [[ஐந்திணை ஐம்பது]] | [[மாறன் பொறையனார்]] |
| [[ஐந்திணை எழுபது]] | [[மூவாதியார்]] |
| [[திணைமொழி ஐம்பது]] | [[கண்ணன் சேந்தனார்]] |
| [[திணைமாலை நூற்றைம்பது]] | [[கணிமேதாவியார்]] |
| [[கார்நாற்பது]] | [[கண்ணன் கூத்தனார்]] |
| [[கைந்நிலை]] | [[புல்லங்காடனார்]] |
| புறநூல் | புலவர்கள் |
| [[களவழி நாற்பது]] | [[பொய்கையாழ்வார்]] |
அறம் 11 , அகம் 6 , புறம் 1
மணிமொழிக்கோவை
- [[நான்மணிக்கடிகை]]
- [[முதுமொழிக் காஞ்சி]]
- [[ஆசாரக்கோவை]]