-
அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
-
அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது
-
ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
-
இலஞ்சி நீர்த்தேக்கம் பலவகைக்கும் பயன்படும்
-
பாண்டி மண்டலத்தில் ஏரியைக் கண்மாய் என்பர். கம்மாய் - வட்டார வழக்குச் சொல்
-
உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
-
ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
-
ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.
-
கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
-
குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
-
குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
-
குமிழி ஊற்று - அடிநிலத்து நீர்,
நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று -
கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
-
கேணி அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
-
புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
-
பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
-
வான்சிறப்பு - திருக்குறள்
-
நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம்
==மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்==
==துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.==
==உணவெனப்படுவது நிலத்தோடு நீரே.== புறநானூறு 18
- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - சிலப்பதிகாரம்
- மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” என்று மாங்குடி மருதனார்
- கல்லணை
- நீளம் 1080 அடி
- அகலம் 40-60 அடி
- உயரம் 15 - 18 அடி
சர் ஆர்தர் காட்டன்
- இந்தியா நீர்பாசனத்தின் தந்தை
- 1829 இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
- கல்லணைக்கு ==கிராண்ட் அணைக்கட்== என்ற பெயரையும் சூட்டினார்.
- கல்லணையின் கட்டுமான உத்தியை கொண்டு 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
ஜான் பென்னி குவிக்
-
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்
-
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதை அறிந்த இவர், அங்கு ஓர் அணை கட்ட முடிவு செய்தார்.
-
தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார்.
-
தொ.பரமசிவன் - குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத்தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல்என்பதல்ல பொருள்; சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று
-
==குள்ளக் குளிரக் குடைந்து நீராடி== என்கிறார் ஆண்டாள்.
-
தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.
-
சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு.
-
திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் வழக்கமும் உண்டு.
-
இறப்புச் சடங்கிலும் உடலை நீராட்டுவதற்காக நீர்மாலை எடுத்து வருதல் உண்டு.
-
அம்மை நோய் கண்டவர்கள் குணமடைந்தபின் தலைக்குத் தண்ணீர்ஊற்றியாகிவிட்டதா? என்று கேட்பது வழக்கம்.
-
சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.
-
அதிகாலையில் வேளாண் நிலத்திற்கு உழைக்க செல்வோர் நீராகாரம் குடிப்பார்கள்.
-
வரவேற்பின் அடையாளமாக நீரே வழங்கப்படுகிறது.
மறைநீர் - மா. அமரேசன் - கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்
- ஒரு கிலோ ஆப்பிள் - 822 லிட்டர்
- ஒரு கிலோ சர்க்கரை - 1780 லிட்டர்
- ஒரு கிலோ அரிசி - 2500 லிட்டர்
- ஒரு கிலோ காப்பிக் கொட்டை - 18,900லி.