[[கணியன் பூங்குன்றனார்]]
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
- தீதும் நன்றும் பிறர்தர வாரா
[[திருமூலர்]]
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
- யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
- அன்பே சிவம்
[[பாரதியார்]]
- மனதில் உறுதி வேண்டும்.
- சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்
- அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதிங்கு இல்லையே
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- தையலை உயர்வு செய்
- காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்
- ஜெய பேரிகை கொட்டடா
- ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி.
- எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்.
[[ஒளவையார்]]
- ஊருடன் கூடி வாழ்
- மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
- அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
- ஆறுவது சினம்
- குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
- பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
- ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?
[[இளங்கோவடிகள்]]
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவோர்
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
- தேரா மன்னா செப்புவது உடையேன்
- யானோ அரசன் யானே கள்வன்
[[நாமக்கல் கவிஞர்]] - வெ. இராமலிங்கம்
- தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு
- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்,
- தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா
- கத்தியின்றி ரத்தமின்றி
- கூட்டுறவில் சேருங்கள், கூடி வாழ பழகுங்கள்
- புரட்சி வேண்டும், புரட்சி வேண்டும்.
[[பாரதிதாசன்]]
- புதியதோர் உலகம் செய்வோம்
- நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
- இருட்டறையில் உள்ளதடா உலகம்
- கொலைவாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே
- மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமைமாட்ட நினைக்கும் சிறைச்சாலை
- பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை திருதல் முயற்கொம்பே
[[அறிஞர் அண்ணா]]
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
- கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
- எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
- மறப்போம், மன்னிப்போம்
இராமலிங்க அடிகள் - [[வள்ளலார்]]
- அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
- பசித்திரு, தனித்திரு, விழித்திரு
- அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
- கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்
[[விவேகானந்தர்]]
- விழுமின், எழுமின், அயராது உழைமின்.
- விழு, எழு, வெற்றிகிட்டும் வரை ஒயாதே.
மனோன்மணியம் [[பெ. சுந்தரம் பிள்ளை]]
- இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
- நீராடும் கடலுடுத்த
[[திரு.வி.க]]
- பகுத்தறிவு மூளைக்கு ஆன்மீகம் ஆன்மாவுக்கு
[[நக்கீரர்]]
- உண்பது நாழி, உடுப்பது இரண்டே
- செல்வத்துப்பயனே ஈதல்
[[தாயுமானவர்]]
- நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ளவாராய்.
- எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.
[[பெருங்கடுக்கோ]]
- வினையே ஆடவர்க்குயிரே வாழ்நுதல்
[[கபிலர்]]
- உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
[[காரைக்கால் அம்மையார்]]
- அறிவானும் தானே அறிவிப்பானும் தானே