“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று”
என்று பாடியவர் - பொய்கையாழ்வார்
- பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்”
என்று பாடியவர் - பூதத்தாழ்வார்
-
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
-
இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
-
சொல்லும் பொருளும்:
• தகளி - அகல்விளக்கு
• ஞானம் - அறிவு
• நாரணன் - திருமால்
இடர் என்பதன் பொருள் - துன்பம் -
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
-
அவர்கள் பாடிய பாடல்களின்
தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். -
இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
-
பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.