தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே –புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில் குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே*
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- இந்நூலை 1930இல் [[உ.வே.சா]]. முதன் முதலில் பதிப்பித்தார்.
- சிற்றிலக்கிய வகைகளுள்(96) ‘தூது’ என்பதும் ஒன்று.
- ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’
- ‘கலிவெண்பா’வால் ஆனது
- தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக ‘மாலையை வாங்கிவருமாறு’ அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக்
- தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
- இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
- கண்ணி - இரண்டடி எதுகை