-
குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.
-
ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும். (எ.கா.) சாலரா, சேகண்டி
-
உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும்.
-
பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
-
சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்
-
ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது - குடமுழா./பஞ்சமகா சப்தம்
-
குழல் - சந்தனம், செங்காலி, கருங்காலி
-
கொம்பு - தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகள்.
-
இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலம்
-
ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி
-
சங்கு -
-
இலக்கியங்களில் பணிலம்
-
சாலரா - பாண்டில்
-
சேகண்டி - மணி வகை - சேமங்கலம்
-
பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும்.
-
மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும்.
-
இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.
-
பறை - பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர்.
-
மத்தளம் - முதற்கருவி
-
படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
-
காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
-
பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை.
-
இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ்
-
பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ்
-
பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்.
-
யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது.
-
வீணை - இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது.
-
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் [[மகேந்திரவர்ம பல்லவன்]] காலத்தில் இருந்தது.