ஞானம் தி சோ வேணுகோபால்

கோடைவயல் - ஞானம்

சாளரத்தின் கதவுகள், சட்டம்;

காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும் கரையான் மண் வீடு கட்டும்

அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன்

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை, அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை!’