- சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது.
- காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப் பகுதியாக விளங்கியது.
- இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது.
- சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது [[கரிகாலன்]] ஆவார்.
- அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்.
- அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
- வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே [[கல்லணை]]யைக் கட்டினார்.
- சோழர்களின் துறைமுகமான புகார் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது.
- [[பட்டினப்பாலை]] எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
- கல்லணை கட்டப்பட்ட போது 69,000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.
முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்:
- இளஞ்சேட்சென்னி
- கரிகாலன்
- கோச்செங்கணான்
- கிள்ளிவளவன்
- பெருநற்கிள்ளி
பிற்காலச் சோழர்கள்:
தலைநகர் உறையூர்
- 9ஆம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த [[விஜயாலயன்]] சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார்.
- இவர் தஞ்சையை கைப்பற்றி தலைநகர் ஆக்கினார்.
- முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின் வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர்.
- முதலாம் [[ராஜராஜ சோழன்]] புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் யை ( ராஜராஜேஸ்வரம் கோவில்/பிரகதீஸ்வரர்கோவில்) தஞ்சாவூரில் கட்டினார்.(1010)
- முதலாம் ராஜராஜனின் மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் [[ராஜேந்திர சோழன்]] (1014-1044) தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார்.
- கி.பி. 1023-ல் அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வடஇந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார்.
- கங்கை கொண்டான் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
- வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக [[கங்கைகொண்ட சோழபுரம் கோவில்]] எழுப்பப்பட்டது.
சோழப் பேரரசின் சரிவு:
- வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார்.
- அதிராஜேந்திரனின் மறைவிற்குப் பிறகு, கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார்.
- [[முதலாம் குலோத்துங்கன்]] எனும் பெயரில் சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார்.
- இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார்.
- பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின.
- காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம் இழக்க நேரிட்டது. 1279- ல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
நிர்வாக முறை:
- நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டுப் பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன. கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.
உள்ளாட்சி நிர்வாகம்:
- உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது.
- பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.
- வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர்.
- நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய சிக்கல்களையும் தீர்த்துவைத்தது.
உத்திரமேரூர் கல்வெட்டுகள்:
- காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும்.
வருவாய்:
- சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
- நிலவரியானது “காணிக்கடன்” என அழைக்கப்பட்டது.
- நிலவரியை நிர்ணயம் செய்வதற்காக சோழ அரசு விரிவான அளவில் நில அளவைப் பணியை மேற்கொண்டது.
- மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
- இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
- சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் “பள்ளிச்சந்தம்” என அழைக்கப்பட்டது.
- “வேளாண்வகை” என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர்.
- வேளாளரில் ஒரு பிரிவினரான “உழுகுடி” என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது.
- மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் “மேல்வாரத்தைப்” (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர். உழுகுடிகள் “கீழ்வாரத்தைப்” (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர்.
- “அடிமை” மற்றும் “பணிசெய் மக்கள்” என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர்.
- சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
- கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழானால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை
- சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவார்.
- [[நம்பியாண்டார் நம்பி]]யால் தொகுக்கப்பட்ட “திருமுறைகள்”
கோவில்கள்:
- [[தஞ்சை பெரிய கோவில்]]
- கங்கைகொண்ட சோழபுரம்
- தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில்
சோழர்களின் கல்விப் பணி:
- முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
- புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன.
- “பெரியபுராணமும் கம்பராமாயணமும்” இக்கால பகுதியைச் சேர்ந்தவையாகும்.
வணிகம்:
-
மணி -வண்ணத்தார்
-
அஞ்சு - வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். அவர்கள் கடல் கடந்து வணிகம் செய்தோர் ஆவர்.
-
அவ்விரு அமைப்புகளும் “ஐநூற்றுவர், “திசை- ஆயிரத்து ஐநூற்றுவர்” எனும் பெயர்களில் ஒருங்கிணைந்தன.
-
ஐநூற்றுவர் அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.
-
தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த வணிகத்தின் மூலம் யானைத் தந்தங்கள், பவளம், சங்குகள், ஒளிபுகும் - புகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம்,
வர்ணப் பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. -
சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.