ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது,
- இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
- மூவகை இடங்களிலும் வரும்.
- உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
- வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.
மூவகை மொழி
- தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி
[!important]
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.(நன்னூல் -260)
-
தனிமொழி - சொல் தனித்து நின்று பொருள் தருமாயின்
- கண், படி - பகாப்பதம். கண்ணன், படித்தான் - பகுபதம்
-
தொடர் மொழி - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
- கண்ணன் படித்தான்
-
பொது மொழி - ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது.
- எட்டு - எண் | எள்+து - எள்ளை உண்
- வேங்கை - மரம் | வேம் + கை - வேகின்ற கை
தொழிற்பெயர்
ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம். காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- தல்,அல்,கை விகுதி பெற்று வரும்.
விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்
- நடத்தல், ஆளல், வாழ்க்கை
ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.
- நட என்பது வினையடி ; நடை, நடத்தல்
எதிர்மறைத் தொழிற்பெயர்
எதிர்மறைப் பொருளில் வருவது
- நடவாமை. கொல்லாமை
முதனிலைத் தொழிற்பெயர்
- விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்
- தட்டு, உரை, அடி
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும்
- கேடு, சூடு
வினையாலணையும் பெயர்
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது.
- அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
- தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்
- வந்தவர் அவர்தான்.
- பொறுத்தார் பூமியாள்வார்.