[[திருமூலர்]]
- திருமந்திரத்தை இயற்றியவர்
- திருமந்திரம் சைவத் திருமுறையில் 10 ஆம் திருமுறைஆகும்.
சிவவாக்கியர்
- இவர் பாடிய பாடல்கள் 520,
- யோகசித்தர் என அழைக்கப்பட்டார்.
- மிகுந்த சீர்திருத்தவாதி
பட்டினத்தார்
- இயற்பெயர் - சுவேதாரண்யர்
- மற்றொருபெயர் திருவெண்காடர்
- நிலையாமையினை உணர்ந்தயோகி
பத்திரகிரியார்
- துளுவ நாட்டு மன்னர் பட்டினத்தாரை கழு ஏற்ற முயன்ற போது தோற்றார்.
- 235 கண்ணிகள் பட்டினத்தாருக்கு அடிமையாகி அரச இன்பங்களை துறந்தார்.
- இவரது பாடல்கள் பத்திரகிரியார் புலம்பல்கள் எனப்படும்.
- இவர் பெண்ணின் மாண்பை போற்றுவதை பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணைத் தாய் போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம் என்ற சிந்தனையின் வழி அறியலாம்.
பாம்பாட்டி சித்தர்
- பாம்பு வடிவாக மண்டலத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற இயலும் என்பது இவரது கொள்கை.
- மனித உடலின் அடிவயிற்றுப்பகுதியில் எருவாய்க்கும் கருவாய்க்கும் நடுவில் பாம்பு புற்றில் கிடப்பது போல் இருப்பது குண்டலினி சக்தி. இதனை எழுப்பி மேலே செலுத்த ஆடுபாம்பே என பாடியதால் பாம்பாட்டிசித்தர் எனப்பட்டார்.
- இவர் 129 பாடல்கள் பாடியுள்ளார். கொங்கு நாட்டு மருதமலையில் வாழ்ந்தார்.
இடைக்காட்டுச் சித்தர்
- கோனார் என வழங்கப்படும் இடையர்களையும் ஆடு மாடுகளையும் முன்னிறுத்தி பாடியதால் இவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
- இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர் ஆதலால் இடைக்காட்டுச் சித்தர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
- கொங்கன சித்தரின் சீடர்
- காலம் கி.பி.15.ஆம் நூற்றாண்டு
- “அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே”எனக் கூறுவதன் மூலம் கடவுள் பக்தியையும் மேன்மையையும் அறிய முடிகிறது.
அகப்பேய் சித்தர்
- அலையும் மனத்தைப் பேய் என உருவகித்ததால் இவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று.
- பேய் மனதை பெண்ணாக விளித்துப்பாடியவர் - அகப்பேய் சித்தர்
- முனதை அலைய விடாமல் ஒரு நிலையில் நிறுத்த வேண்டும் என்பதனை “ஆரலைந் தாலும் நீயலையாதேடி ஊரலைந் தாலும் ஒன்றையும் நாடாதே” எனஅறிவுறுத்துகிறார்.
குதம்பைசித்தர்
- குதம்பை என்பது காதணி.
- குதம்பை அணிந்த பெண்களை முன்னிலைப்படுத்தி பாடியதால்.
- பாடிய பாடல்களின் எண்ணிக்கை 32.
கடுவெளிச்சித்தர்
- 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்
- உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர்
- வைதோரைக் கூட வையாதே இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே - கடுவெளிச்சித்தர்
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன் நாலாறுமாதமாய்க் குயவனைவேண்டி கொண்டுவந்தான் ஒருதோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத் தாண்டி என்னும் பாமரரும் அறிந்தபாட்டு இவருடையதே.
அழுகுணிச் சித்தர்
- இவரது பாடல்கள் அழகும் அணிநயமும் மிகுந்த காணப்படுவதால் இவருக்கு இப்பெயர்
- பையூரிலேயிருந்து பாழுரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்.
கொங்கணிசித்தர்
- காலம் கி.பி.7ஆம் நுாற்றாண்டு
- கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.
- இவர் ரசவாதம், யோகம், மருத்துவம் பற்றிய நூல்கள் எழுதியுள்ளார்.
- முக்திபெற்ற இடம் திருப்பதி.
- கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரதம் விள்ளாதே பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே.
சட்டமுனி
- சட்டமுனி 1200, திரிகாண்டம், சரக்குவைப்பு, நவரத்தினவைப்பு.
- தயக்கத்தினால் வரும் தீமைபற்றி
அகத்தியர்
- முதல் சித்தர் அகத்தியர்,
- குருமுனி, நாதமுனி
- அனைத்து சமயத்தின் கொள்கைகளையும் அவற்றில் உள்ள மேன்மைகளை போற்ற வேண்டும் என்றவர் - அகத்தியர்.
சுப்பிரமணியசித்தர்
- இறைவனை முருகனாகவே காண்கிறார்.
- பல பாடல்களில் முருகனை மயில் வீரன் எனக் குறிப்பிடுகின்றார்.
போகர்
- திருமூலரின் மாணாக்கர் காலங்கிநாதர்.
- காலங்கி நாதரின் மாணாக்கர் - போகர்.
- போகர் ஏழாயிரம், போகர் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம்
- மருத்துவ பழஞ்சுவடிகளை போகரின் பெயரால் கூறுவது நடைமுறையில் காணப்படுகிறது.
- போகர் நிகண்டு சித்த மருத்துவம் குறித்த
- முக்தி பெற்ற இடம் பழனி,
உரோமமுனி
- உடல் முழுவதும் உரோமம் மிகுதியாக இருந்ததால் இவருக்கு உரோம முனி
- உரோம முனிஞானம், உரோமமுனி நூறு, உரோமமுனி ஐநூறு, ஐம்புலநூல்.
கரூவூர் சித்தர்
- கருவூரில் பிறந்ததால்
- பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை நிறுவினார் என்பது மரபு.
- பெரிய கோவிலில் கரூவூர் சித்தருக்கு சிலை உள்ளது.
- இவர் பூஜைக்கு உரிய ஆகம விதிகளை பாடியுள்ளார்.
தேரையர்
- பாண்டிய மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை அகற்றியதால்
- நோய் அணுகவிதி, பாதார்த்தகுணசிந்தாமணி, வைத்தியசிந்தாமணி, கலைஞானம்
- வைத்தியத்தில் மிகவும் புலமைப்பெற்றவர்.
- அகத்தியரின் மாணாக்கரில் ஒருவர் தேரையர்.
வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்