- சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும், மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும் பகுதியை ஆண்டனர்.
- அவர்களின் தலைநகர் வாதாபி (பதாமி).
சாளுக்கியர்களில் நெருங்கிய தொடர்புடைய சார்பற்ற வம்சங்கள் இருந்தன.
- வாதாபிச் சாளுக்கியர்கள்
- வெங்கிச் சாளுக்கியர்கள்(கீழை)
- கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலை)
- வடக்கே ஹர்ஷரின் பேரரசும், தெற்கே பல்லவ நாடும், கிழக்கே கலிங்கமும் (ஒடிசா) சாளுக்கியர்களின் எல்லையாக இருந்தன.
சான்றுகள்:
கல்வெட்டுக்கள்
- மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு,
- [[காஞ்சி கைலாசநாதர் கோவில்]] கல்வெட்டு,
- பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு
- முதலாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
அயலவர் குறிப்புகள்
- [[யுவான் சுவாங்]]கின் குறிப்புகள்
வாதாபிச் சாளுக்கியர்:
- முதலாம் புலிகேசி, பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார்.
- கி.பி.(பொ.ஆ) 543 - இல் வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்.
- விரைவில் கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
- இவருடைய மகன் முதலாம் கீர்த்திவர்மன் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 566 597) கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
- இரண்டாம் புலிகேசி (ஆட்சிக்காலம் கி.பி. 610 642) இவ்வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார்.
- பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்.
- குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார்.
- இவர் வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார். இவரும் ஒப்புக் கொண்ட புரிதலின்படி இருவருக்கும் இடையிலான எல்லையாக நர்மதை நதி வரையறை செய்யப்பட்டது.
- கி.பி. 624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதைத் தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வழங்கினார்.
- விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்.
- கி.பி. (பொ.ஆ.) 641-647 காலப்பகுதியில் பல்லவர்கள் தாக்கணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர். ஆனால் கி.பி. 655 இல் சாளுக்கியர் அதனை மீட்டனர்.
- முதலாம் விக்கிரமாதித்தனும் (கி.பி. (பொ.ஆ.) 655 680) அவருக்குப் பின் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர்.
- ஆனால் நகரைச் சேதப்படுத்தவில்லை.
- இவருக்குப் பின்னர் அரச பதவியேற்ற இரண்டாம் கீர்த்திவர்மனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்தி துர்கா போரில் தோற்கடித்தார்.
அய்கோல் கல்வெட்டு:
- அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது.
- இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
- இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்:
- வாதாபிச்சாளுக்கியரின் வழித்தோன்றல்கள்.
- கல்யாணியைத் (தற்போதைய பவச கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.
- இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசாக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார்.
- இவர் கி.பி. (பொ.ஆ) 973 இல் மாளவ அரசர்
- பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்.
- இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
- முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
- ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்தியாவிலிருந்த இரண்டு பேரரசுகளான மேலைச் சாளுக்கியர்களும், தஞ்சாவூர் சோழர்களும் வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
- பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கு காவிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
கலை மற்றும் கட்டடக்கலை
- சைவம், வைணவம்
- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.
- இது தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும்.
- சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை அவர்கள் மேம்படுத்தினர்.
- கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
- பெரும் எண்ணிக்கையிலானகுடைவரைக் கோயில்களையும், கட்டுமானக் கோவில்களையும் கட்டி சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுளர்களுக்கு அர்ப்பணித்தனர்.
- சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் அய்கோல், வாதாபி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் உள்ளன.
- வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணு கோவில்கள், பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருபாக்ஷா கோவில் ஆகியன கற்களால் கட்டப்பட்ட கோவில்களாகும்.
- வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மங்கலேசனால் கட்டப்பட்டது.
- இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு அங்குள்ளது.
- அவர்களின் குகைக்கோவில்கள் அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் உள்ளன.
- வாதாபியிலுள்ள குகைக் கோவில்களில் சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணு, விஷ்ணுவின் வராக, நரசிம்ம, (பாதி சிங்கம் பாதி மனிதன்) வாமன (குள்ள) அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- நேர்த்திமிக்க சிற்பங்களாகச் லாக்கண்டியிலுள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவில், குருவட்டியிலுள்ள மல்லிகார்ஜுனா கோயில், பகலி என்னுமிடத்திலுள்ள கள்ளேஸ்வரர் இட்டகியிலுள்ள மகாதேவா கோவில் ஆகியவை.
- ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர்.
- அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவை,
- பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டடக்கல்:.
[[யுனெஸ்கோ]] உலகப் பாரம்பரியச் சின்னம்.
- பட்டடக்கல் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும்.
- அங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் நான்கு வட இந்திய பாணியான நாகாரா பாணியிலும் மற்றமுள்ள ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
- விருப்பாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் திராவிடப் பாணியிலும்
- பாப்பநாதர் கோவில் நாகாரா பாணியிலும் அமைந்துள்ளன.
- விருப்பாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
- இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.