கேட்கிறதா என்குரல்

மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம்வருடி பகலெரிச்சல் பணக்கவலை பயக் குழப்பம் மொட்டை மாடித்தனியிரவில் நட்சத்திரக் கணக்கெடுப்பில் மறுபடியும் தவறவிட்ட தாளாத தன்னிரக்கம் இவை எல்லாமே எளிதாகக் கரைந்து போகும் மாயங்கள் செய்கின்ற பூங்காற்றே!
இத்தனை நாள் உனைப் பாடாதிருந்து விட்டேன் புதுக் கவிதையில் சிக்கிப் போனேன்.
தேவகோட்டை வா.மூர்த்தி