[[வேத காலம்]]
கி.மு.ஆறாம் நூற்றாண்டின் முக்கியத்துவம்:
- புதிய பிராந்திய அரசுகள் உருவாகின.
- மகாவீரரும், கௌதம புத்தரும்
- இரும்பைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம் மற்றைய மகாஜனபதங்களைவிட மகதம் எழுச்சி பெற முக்கிய காரணமாயிற்று.
கணா:
- ‘கணா’ - ‘சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
- ‘சங்கா’ - ‘மன்றம்’
- கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால் ஆளப்பட்டது.
முடியாட்சி:
- ‘முடியாட்சி’ அரசு என்பது ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும்.
- முடியாட்சி முறை அரசியல் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும்போது அது அரச வம்சமாக மாறுகிறது.
பதினாறு மகாஜனபதங்கள்
நான்கு முக்கிய மகாஜனபதங்கள்
- மகதம் - பீகார்
- அவந்தி - உஜ்ஜைனி
- கோசலம் - கிழக்கு உத்திரப்பிரதேசம்
- வத்சம் - கோசாம்பி, அலகாபாத்
பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்:
- ஹரியாங்கா வம்சம்
- சிசுநாக வம்சம்
- நந்த வம்சம்
- மௌரிய வம்சம்
ஹரியங்கா வம்சம்:
- பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
- பிம்பிசாரர் லிச்சாவி, மதுரா மற்றும் கோசல ஆகிய பகுதிகளில் தமது அரசை விரிவுபடுத்தினார்.
- அவருடைய மகன் அஜாதசத்ரு (புத்தரின் சமகாலத்தவர்) ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
- அவருடைய வாரிசான உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டார்.
சிசுநாக வம்சம்:
- காலசோகா தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.
- இவர் இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டினார்.
நந்த வம்சம்:
-
நந்தர்களே இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள்.
-
முதல் நந்தவம்ச அரசர் மகாபத்ம நந்தர் ஆவார்.
-
அவரைத் தொடர்ந்து அவருடைய எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர்.
அவர்கள் நவநந்தர்கள் (ஒன்பது நந்தர்கள்) -
கடைசி அரசரான தனநந்தர் சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
மௌரியப் பேரரசு:
தொல்லியல் சான்றுகள்: முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்.
கல்வெட்டுக்கள் : அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள், ஜுனாகத் கல்வெட்டு.
மதச்சார்பற்ற இலக்கியங்கள்:
- கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
- விசாகதத்தரின் முத்ராராட்சஷம்
- மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்
மதம் சார்ந்த இலக்கியங்கள் நூல்கள்
- சமண, பௌத்த புராணங்கள்
வெளிநாட்டுச் சான்றுகள்: தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா.
மெகஸ்தனிஸ்
- கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர்.
- 14 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.
- அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா.
**மௌரியப் பேரரசு இந்தியாவில் முதல்
பேரரசு:
**
தலைநகர் - பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா)
அரசு - முடியாட்சி
வரலாற்றுக் காலம் 322 முதல் 187 வரை
முக்கிய அரசர்கள்: சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்
பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்:
மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.
சந்திரகுப்த மௌரியர்:
- மௌரியப் பேரரசே இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும்.
- சந்திரகுப்த மௌரியர் இப்பேரரசை மகதத்தில் நிறுவினார்.
- பத்ரபாகு எனும் சமணத்துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்.
- சந்திரகுப்தர் சரவணபெலகொலாவில் (கர்நாடகா) சமணச் சடங்கான சல்லேகனா செய்து உயிர் துறந்தார். (சல்லேகனா என்பது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் ஆகும். இது ஒரு சமணச் சடங்கு முறையாகும்.)
பிந்துசாரார்:
- பிந்துசாரரின் இயற்பெயர் சிம்ஹசேனா.
- கிரேக்கர்கள் பிந்துசாரரை அமிர்தகதா என்று அழைத்தனர். அதன் பொருள் ‘எதிரிகளை அழிப்பவன் என்பதாகும்.
- பிந்துசாரரின் ஆட்சியின்போது மௌரியரின் ஆட்சி இந்தியாவின் பெரும் பகுதியில் பரவியது. அவர் தனது மகன் அசோகரை உஜ்ஜைனியின் ஆளுநராக நியமித்தார். அவருக்குப்பின் அசோகர் மகதத்தின் அரசரானார்.
அசோகர்:
-
மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் அசோகர் ஆவார்.
-
அவர் ‘தேவனாம்பிரியர்’ என்று அழைக்கப்பட்டார். ‘கடவுளுக்கு பிரியமானவன்’ என்பது இதன்
பொருள் ஆகும். -
அசோகர் கி.மு.(பொ.ஆ.மு) 261ல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அப்போரில் வென்று கலிங்கத்தை கைப்பற்றினார்.
-
அப்போரின் பயங்கரத்தை அசோகரே தன்னுடைய 13-ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.
-
அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
-
அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார் H.G.வெல்ஸ்
-
அவர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
-
தர்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
-
அசோகர் தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார். பேரரசு முழுவதிலும் பௌத்தமதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்
-
அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.”
அசோகரின் பேராணைகள்:
- பேரரசர் அசோகருடைய ஆணைகள் மொத்தம் 33.
- அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரளபுத்திரர் ஆகியோரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.
அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை:
- சாஞ்சி -பிராமி
- காந்தகார்- கிரேக்கம் மற்றும் அராமிக்
- வடமேற்குப் பகுதிகள் - கரோஸ்தி
மௌரியரின் நிர்வாகம்:
- அரசரே மௌரியப் பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் ஆவார்.
- ‘மந்திரிபரிஷத்’ எனும் அமைச்சரவை அரசருக்கு உதவியது. இந்த அமைச்சரவை ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகாமந்திரி மற்றும் இளவரசனைக் கொண்டதாகும்.
- அரசர் ஒரு மிகச் சிறந்த உளவுத்துறையைக் கொண்டிருந்தார்.
வருவாய் முறை:
- நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது.
- லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளைக் குறிப்பிடுகின்றது.
- மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவரியாக வசூல் செய்யப்பட்டது.
நீதி நிர்வாகம்:
- அரசரே நீதித்துறையின் தலைவராவார்.
- அவரே மேல்முறையீட்டு நீதிமன்றமும்.
- தண்டனைகள் கடுமையாக இருந்தன.
இராணுவ நிர்வாகம்:
- அரசரே படைகளின் தலைமைத் தளபதியாவார்.
நகராட்சி நிர்வாகம் (நகரம் ம மாநகரம்):
- நகரம் நிர்வாகம் ‘நகரிகா’ என்னும் அதிகாரியின் கீழிருந்தது. அவருக்கு ஸ்தானிகா, கோபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.
- ருத்ரதாமனின் ஜீனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டத பதிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.
நாணயம்:
-
அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தைப் பணமாகவே வழங்கியது.
மயில், மலை மற்றும் பிறைச் சந்திர வடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் (பணம்), -
‘மாஸாகாஸ்’ என்று அழைக்கப்பட்ட செம்பு நாணயங்கள்
-
கிரேக்கம் (ஹெலனிக்) மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது.
-
காசி (பனாரஸ்) வங்கா (வங்காளம்) காமரூபா (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்பு மிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.
-
முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் - முக்கிய இறக்குமதிப் பொருட்கள்
நறுமணப் பொருள்கள் குதிரைகள்
முத்துக்கள் - தங்கம்
வைரங்கள் - கண்ணாடிப் பொருட்கள்
பருத்தி இழை துணி - பட்டு (லினன்)
தந்தத்தினாலான பொருட்கள்
சங்குகள், சிப்பிகள்
மௌரியர் கலையும் கட்டடக்கலையும்:
-
உள்ளூர்க் கலை யக்ஷன், யக்ஷி
உருவச்சிலைகள். -
யக்ஷ்ன் என்பது காட்டுச் சூழல் தொடர்புடைய கடவுள் ஆவார்.
-
யக்ஷி என்பது யக்ஷாவின் பெண்வடிவமாகும்.
ஸ்தூபி:
- ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும்.
- புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில்
வைக்கப்பட்டிருக்கும்.
சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தூண்:
நாகார்ஜுனா பராபர் குன்றுகளிலுள்ள பாறை குடைவரைக் குகைக் கோவில்கள்.
புத்தகயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன.
பராபர் குன்றிலுள்ள மூன்று குகைகளில்
அசோகருடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன. (இக்குகைகள் யாருக்காக அமைத்துத் தரப்பட்டன என்ற விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள்)
நாகார்ஜுனா கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் தசரத மௌரியரின் (அசோகரின் பேரன்) கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
- அசோகருக்குப் பின்வந்த அரசர்கள் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
- பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்.
- பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது.
- மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.
பண்டைய பெயர் - தற்போதைய பெயர்
ராஜகிரகம் -ராஜ்கிர்
பாடலிபுத்திரம்-பாட்னா
காலிங்கா - ஒடிசா
உலகம் அந்நாளில்:
சீனப்பெருஞ்சுவர்:
இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும்.
குந்சி-ஜங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டில் இந்த சுவர்களை இணைத்தார்.
ஒலிம்பியாவின் ஜியஸ்(zeus) கோயில்:
கிரிஸ்நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு. (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ற கடவுளுக்கு
இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.