“கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே” - காளமேகப்புலவர்.
காளமேகப் புலவர்
- இவரின் இயற்பெயர் வரதன்
- மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார்.
- இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள்:
- திருவானைக்கா உலா
- சரசுவதி மாலை
- பரபிரம்ம விளக்கம்
- சித்திர மடல்
”கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்” காளமேகப் புலவர்