களப்பிரர்கள்
- கி.பி.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் படிப்படியாகத் தனது சரிவைச் சந்தித்தது.
- களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்.
- அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
- இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, [[யாப்பெருங்கலம்]], [[பெரிய புராணம்]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- [[சீவக சிந்தாமணி]], [[குண்டலகேசி]] ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.
- தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது.
- சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது.
- [[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]] சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும், வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருண்ட காலம் அல்ல.