ஆசிரியர் - [[கம்பர்]]
-
ஊர் - [[தேரழுந்தூர்]] (மயிலாடுதுறை அண்மையில் உள்ளது) நாகை மாவட்டம் (அ) திருவழுந்தூரில்
-
இறப்பு: நாட்டரசன் கோட்டை
-
12th Cen (1180–1250)
-
[[புகழேந்தி புலவர்]], [[ஜெயங்கொண்டார்]], [[ஒட்டக்கூத்தர்]] இவர் சமகாலத்தவர்.
-
[[இரண்டாம் குலோத்துங்கன்]] காலத்தில் கம்பர் வாழ்ந்தார்
-
கம்பராமாயணம், சடகோபரந்தரதி (நம்மாழ்வார் பற்றியது), ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது.
-
சிறப்பு பெயர்கள்: கவிசக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிபேரரசர், கம்பநாடன், கம்ப நாட்டாழ்வான்.
-
ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். இவரை பற்றி இராமாயணத்தில் 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பத்து கவிகளில் பாடியுள்ளார்.
நூல்
- பாடல் வகை: அறுசீர் கலிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 118 படலங்கள், 10589 பாடல்களை கொண்டது.
- பாலகாண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்த காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்
- அயோத்தியா காண்டம் 13 படலங்களை கொண்டது.
- அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் 7ம் படலமாகும், இதனை கங்கை படலம் எனவும் கூறுவர்
- சுந்தர காண்டம் இராமாயணத்தின் முடிமணியாக திகழ்கிறது
- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தை இயற்றினார். இது 7வதுகாண்டமாகும்.
- இராமாயணம் ஆதிகாவியம் எனவும் கம்ப நாடகம், கம்பசித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது
- வரமிகு கம்பன் சொன்ன வண்ணமந் தொண்ணுற்றாறே என்ற கணக்கீடும் உண்டு.
- இராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் இராமாவதாரம்.
- திருவெண்ணெய் நல்லூர், திருவொற்றியூர் போன்ற இடங்களில் இராமாயணத்தை பாடி, பின்பு திருவரங்கத்தில் அரங்கேற்றினார்.
- இராமாயணத்தில் இரணியன் வதைப் படலம், மாயாசனகப் படலமும் சிறந்தது
- பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது
- தொல்காப்பிய நெறி நின்றவர் கம்பர். வடமொழிகளை நீக்கி தமிழ்படுத்தியவர்.
- வால்மீகி - ஆதிகவி | இராமாயணம் - ஆதிகாவியம்
[! Quote]
திருக்குறளும், கம்பராபயணமும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர்கள்
[!important]
விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் - பலபட்டைச் சொக்கநாத புலவர்.
[!important]
உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்தாலும் திருக்குறளும், இராமாயணமும் இருந்தால் அதனை மீண்டும் புதுப்பித்துவிடலாம் - கால்டுவெல்
கம்பனை பற்றி [[பாரதியார்]]
- கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்
- கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு
- யாமறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவனை போல் இளங்கோவை போல்
பாடப்பகுதி
==விருந்தோம்பல் குறித்து==
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக்
==பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே==
கம்பராமாயணம், 1:2:36
==தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும் மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறு மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே’==
பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
==தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க, கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்கத், தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ’==
==வண்மையில்லை யோர்வறுமை யின்மையால் திண்மயில்லை நேர்செறுந ரின்மையால் உண்மையில்லை பொய்யுரை யிலாமையால் வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்’==
பாலகாண்டம் - நாட்டுப்படலம்
==வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்; மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்’==
அயோத்தியாகாண்டம் - கங்கைப்படலம்
‘==ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ? வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ? தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
‘ஏழைமை வேடன் இறந்திலன் ’ என்று எனை ஏசாரோ
அயோத்தியாகாண்டம் - கங்கைகாண் படலம்
==“உறங்கிகின்ற கும்பகன்ன ! உங்கள் மாய வாழ்வெ லாம் இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்! கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே, உறங்குவாய், உறங்குவாய் ! இனிக் கடந்து உறங்குவாய்!”==
யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப்படலம்
==“உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரணங்களே”==
குகன் வருகை
==ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.
==விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும் முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினில் மட அன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்
==துன்புள தெனின் அன்றோ சுகமுனது அதுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுள தென உன்னா அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்==
யுத்தகாண்டம்
==ஒன்றே யென்னின் ஒன்றே யாம்,
பலவென் றுரைக்கிற் பலவேயாம்
==கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
==விற்பெருந் தடந்தோன் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேனல்லேன்
உழவின் சிறப்பு
==மேழிபிடிக்கும்கை வேல்வேந்தர்நோக்கும்கை
ஆழிதரித்தே அருளும்கை சூல்வினையை
==பாலகாண்டம், நகரப் படலம் 154==
==பன்ன அரும் கலைதெரி== ==பட்டிமண்டபம்==
கதை மாந்தர்கள்
- அயோத்தியின் மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர் ராமன், பரதன், இலக்குவன், சத்ருகனன்
- கைகேயின் மனதை கெடுத்தவள் மந்தரை - கூனி
- கோசலை (அ) கௌசல்யா - இராமன்,
- கைகேயி - பரதன்,
- சுமத்திரை - இலக்குவன். சத்ருகனன்
- திரிசடை - அசோகவனத்தில் காவல் காத்த அரக்கி
- இந்திரஜித் / மேகநாதன் -இராவணனின் மகன்
- தாடகை -சுக்ரிவனின் மனைவி
குகன்
- காங்கையாற்றுத் தோணிதுறைக்கும், 1000 படகுகளுக்கும் தலைவன்.
- குகன் சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன்.
- போர்க்குணம் உடையவன், துடியெனும் பறைகளை உடையவன் பகைவரை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன், மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன், தோல் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவள், இருள் போன்ற கரிய நிறத்தை உடையவன், கரிய மேகக்கூட்டம் திரண்டு வந்தது போல மிகுந்த படை பலம் உடையவன், முனிவரின் தவச்சாலையில் தங்கியிருந்த இராமனை காண தேனும், மீனும் கொண்டு சென்றவன், தாயினும் சிறந்த அன்பினன் என்று இலக்குவனால் சொல்லப்பட்டவன் குகன்.
- எல்லாவற்றிலும் இனிய நண்பனே இவ்விடத்தில் என்னுடன் இருப்பாயாக என்று குகனை நோக்கி இராமன் கூறியது
- நெடியவன்-உயர்ந்தவனாகிய இராமன்
- அன்னவன் - குகன்
- பண்ணவன் நற்குணங்கள் உடைய இலக்குவன்
- இராமன் கோதண்டம் என்னும் வில்லேந்தியவன்
- அனுமன் - சிறிய திருவடி , சுந்தரன் l
- இராமன் அனுமனிடம் கணையாழியையும், சீதை அனுமனிடம் சூடாமணியையும் வழங்கினர்.
- திருவடி தொழுதபடலம் - சுந்தர காண்டம் (அனுமனுடைய கூற்று)
- உத்திரபிரதேசத்தில் பாயும் நதி சரயு
- பிறை நிலவு போல் நெற்றி உடையவள் சீதை
- தாமரை போன்ற கண்களை உடையவன் இராமன்
- இராமன் பிரிவால் அனலிலிட்ட மெழுகுபோல் துன்பமடைந்தவர்கள் அந்தணர்கள்