நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி
தொல்காப்பியம் | எழுத்து 2 : 43
குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே
எழுத்து 2 : 44
நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்
- உயிர் வரிசையில் - 6 எழுத்துகளும்
- ம வரிசையில் 6 எழுத்துகளும்
- த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும்
- க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும்
- ய வரிசையில் ஒன்றும்
- நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார்;- நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
‘மா’ - என்னும் ஒரு சொல் மரம், விலங்கு. பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
| எழுத்து | சொல் |
|---|---|
| ஆ | பசு |
| ஈ | கொடு |
| ஊ | இறைச்சி |
| ஏ | அம்பு |
| ஐ | தலைவன் |
| ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
| கா | சோலை |
| கூ | பூமி |
| கை | ஒழுக்கம் |
| கோ | அரசன் |
| சா | இறந்துபோ |
| சீ | இகழ்ச்சி |
| சே | உயர்வு |
| சோ | மதில் |
| தா | கொடு |
| தீ | நெருப்பு |
| தூ | தூய்மை |
| தே | கடவுள் |
| தை | தைத்தல் |
| நா | நாவு |
| நீ | முன்னிலை ஒருமை |
| நே | அன்பு |
| நை | இழிவு |
| நோ | வறுமை |
| பா | பாடல் |
| பூ | மலர் |
| பே | மேகம் |
| பை | இளமை |
| போ | செல் |
| மா | மாமரம் |
| மீ | வான் |
| மூ | மூப்பு |
| மே | அன்பு |
| மை | அஞ்சனம் |
| மோ | மோத்தல் |
| யா | அகலம் |
| வா | அழைத்தல் |
| வீ | மலர் |
| வை | புல் |
| வெள | கவர் |
| நொ | நோய் |
| து | உண் |