தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை பற்றி
’கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ என்று கூறும் நூல் -ஐங்குறுநூறு
-
ஐங்குறுநூறு அகநூல் ஆகும்.
-
500 பாடல்களைக் கொண்டது.
-
சிற்றெல்லை 3 அடி. பேரெல்லை 6 அடி.
-
ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள்
-
ஒவ்வொரு திணையும் பத்துப்பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது.
-
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
-
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
-
கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
இந்நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதர்
திணையையும் பாடிய புலவர்கள்
• குறிஞ்சி - கபிலர்
• முல்லை - பேயனார்
• மருதம் - ஓரம்போகியார்
• நெய்தல் -அம்மூவனார்
• பாலை - ஓதலாந்தையார்