இலக்கணக் குறிப்பறிதல்

தமிழ் இலக்கணம்

  1. எழுத்திலக்கணம்

  2. பொருளிலக்கணம்

[[யாப்பிலக்கணம்]]

  1. அணியிலக்கணம்

[[எழுத்திலக்கணம்]]

[[சொல்லிலக்கணம்]]

தொகைநிலைத் தொடர்

ஆறு வகைப்படும்.

  1. வேற்றுமைத்தொகை
  1. வினைத்தொகை
  1. பண்புத்தொகை
  1. உவமைத் தொகை
  1. உம்மைத்தொகை
  1. அன்மொழித்தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

தொகாநிலைத் தொடர்

ஒன்பது வகைகள்

  1. எழுவாய்த்தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைமுற்றுத்தொடர்
  4. பெயரெச்சத்தொடர்
  5. வினையெச்சத்தொடர்
  6. வேற்றுமைத்தொடர்
  7. இடைச்சொல் தொ டர்
  1. உரிச்சொல் தொடர்
  2. அடுக்குத் தொடர்

வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா.
கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

வினா ஆறுவகைப்படும்

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப’
என்று கூறும் நூல் - நன்னூல்.

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்’ என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும்.

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழிமாற்றுப் பொருள்கோள்
  3. நிரல்நிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிப்பாப்புப் பொருள்கோள்
  7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

ஆற்றுநீர்ப்பொருள்கோள்:

பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது ‘ஆற்றுநீர்ப்பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)

“சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’

என்ற பாடல் இடம் பெற்ற நூல் - சீவகசிந்தாமணி

‘மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே’ என்று
ஆற்றுநீர்ப் பொருள்கோளைப் பற்றிக் கூறும் நூல் - நன்னூல்.

நிரல்நிறைப் பொருள்கோள்:

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரியையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப்பொருள்கோள்’ ஆகும்.
இது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’, ‘எதிர்நிரல் நிறைப் பொருள்கோள்’ என இருவகைப்படும்.

முறை நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்வது ‘முறை பொருள்கோள்’ ஆகும். நிரல்நிறைப்

(எ.கா) ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’

எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்:

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா)
‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்’

கொண்டு கூட்டுப் பொருள்கோள்:

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா)
‘ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு’
மயிலை நாதர் உரை

‘யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே’
நன்னூல்

‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி மொழிபெயர்ப்பு இருந்தது.

‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை’
என்ற நீதி வெண்பா பாடலடிகளில் குறிப்பிடப்படுவது - கல்வி

‘அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.‘
என்ற கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்