-
நில வகைகள் - தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.
-
சொல்லுதல் - ,விளம்புதல், செப்புதல், இயம்பல், மொழிதல்
-
துய்ப்பது - கற்பது, தருதல்
-
மேவலால் - பொருந்துதலால், பெறுதலால்
-
மயலுறுத்து - மயங்கச்செய்
-
ப்ராண ரஸம் - உயிர்வளி
-
லயத்துடன் - சீராக
-
நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
-
நேமி - சக்கரம்
-
கோடு - மலை
-
கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
-
நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
-
தூஉய் - தூவி
-
விரிச்சி - நற்சொல்
-
தயங்கி – அசைந்து
-
காய்ந்தேன் – வருந்தினேன்
-
புழை – துளை
-
சுவல் - தோள்
-
பாக்கம் - பேரூர்
-
விசும்பு – வானம்
-
ஊழி – யுகம்
-
ஊழ் – முறை
-
தண்பெயல் – குளிர்ந்த மழை
-
ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
-
பீடு – சிறப்பு
-
ஈண்டி – செறிந்து திரண்டு
-
அருகுற – அருகில்
-
முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்.
-
சுடினும் - சுட்டாலும்
-
மாளாத-தீராத
-
மாயம் - விளையாட்டு
-
கேள்வியினான் - நூல் வல்லான்
-
கேண்மையினான் - நட்பினான்
-
தார் - மாலை
-
முடி - தலை
-
முனிவு - சினம்
-
அகத்து உவகை - மனமகிழ்ச்சி
-
தமர் - உறவினர்
-
நீபவனம் - கடம்பவனம்
-
கவரி - சாமரை (கவரிமானின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சினம்)
-
நுவன்ற-சொல்லிய
-
என்னா - அசைச்சொல்
-
சுண்ணம் - நறுமணப்பொடி
-
தூசு - பட்டு
-
துகிர் - பவளம்
-
கிழி - துணி
-
வெறுக்கை - செல்வம்
-
நொடை - விலை
-
காருகர் - நெய்பவர் (சாலியர்)
-
பாசவர் - வெற்றிலை விற்போர்
-
ஓசுநர் - எண்ணெய் விற்போர்
-
மண்ணுள் வினைஞர் - ஓவியர்
-
மண்ணீட்டாளர் - சிற்பி
-
அசைஇ – இளைப்பாறி
-
அல்கி – தங்கி
-
கடும்பு - சுற்றம்
-
நரலும் – ஒலிக்கும்
-
ஆரி - அருமை
-
படுகர் – பள்ளம்
-
வயிரியம் – கூத்தர்
-
வேவை – வெந்தது
-
இறடி – தினை
-
பொம்மல் – சோறு
-
பண்டி - வயிறு
-
அசும்பிய - ஒளிவீசுகிற
-
முச்சி - தலையுச்சிக் கொண்டை
-
சேக்கை – படுக்கை
-
யாக்கை – உடல்
-
பிணித்து – கட்டி
-
வாய்ந்த – பயனுள்ள
-
இளங்கூழ் – இளம்பயிர்
-
தேம்ப – வாட
-
அசும்பு – நிலம்
-
உய்முறை – வாழும் வழி
-
ஓர்ந்து – நினைத்து
-
கடிந்து - விலக்கி
-
உவமணி – மணமலர்
-
படலை – மாலை
-
துணர் – மலர்கள்
-
கிழக்கு - குனக்கு
-
மேற்கு - குடக்கு
-
வடக்கு - வாடை
-
கிழக்கு - கொண்டல்
-
மேற்கு - கோடை
-
வாடை - வாடைக்காற்று
-
தெற்கு - தென்றல்
-
திறமெல்லாம் - சிறப்பெல்லாம்;
-
சிந்து - ஒருவகை இசைப்பாடல்.
-
ஊனரசம் - குறையுடைய சுவை;
-
வனப்பு - அழகு. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
-
கந்தம் - மணம்
-
மிசை – மேல்
-
மா - வண்டு
-
வாவி–பொய்கை
-
வளர் முதல் - நெற்பயிர்
-
தரளம் - முத்து
-
பணிலம் - சங்கு
-
வரம்பு - வரப்பு
-
கழை - கரும்பு
-
கா - சோலை, காடு
-
குழை – சிறு கிளை
-
அரும்பு – மலர், மொட்டு
-
மாடு - பக்கம்
-
நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்
-
கோடு - குளக்கரை
-
துதைந்து எழும் - கலக்கி எழும்
-
கன்னி வாளை - இளமையான வாளைமீன்
-
சூடு - நெல் அரிக்கட்டு
-
சுரிவளை - சங்கு
-
வேரி - தேன்
-
பகடு - எருமைக்கடா
-
மேதி - எருமை
-
பாண்டில் - வட்டம்
-
சிமயம் - மலையுச்சி
-
நாளிகேரம் - தென்னை
-
நரந்தம் - நாரத்தை
-
கோளி - அரசமரம்
-
சாலம் - ஆச்சா மரம்
-
தமாலம் - பச்சிலை மரம்
-
இரும்போந்து - பருத்த பனைமரம்
-
சந்து - சந்தன மரம்
-
நாகம் - நாகமரம்
-
காஞ்சி – ஆற்றுப்பூவரசு.
-
புணரியோர் – தந்தவர்
-
புன்புலம் – புல்லிய நிலம்
-
தாட்கு – முயற்சி, ஆளுமை
-
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
-
சமயக் கணக்கர் -சமயத் தத்துவவாதிகள்
-
பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள்
-
குழீஇ-ஒன்றுகூடி
-
தோம் - குற்றம்
-
கோட்டி - மன்றம்
-
பொலம்-பொன்
-
வேதிகை-திண்ணை
-
தூணம்-தூண்
-
தாமம்-மாலை
-
கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
-
காழூன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி
-
விலோதம் - துணியாலான கொடி
-
வசி- மழை
-
செற்றம்-சினம்
-
கலாம்-போர்
-
துருத்தி- ஆற்றிடைக்குறை(ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).
-
நவிலல் – சொல்லல்.
-
மாக்கடல் – பெரிய கடல்,
-
மின்னாளை – மின்னலைப் போன்றவளை;
-
மின்னாள் – ஒளிரமாட்டாள்.
-
தணல் – நெருப்பு;
-
தாழி - சமைக்கும் கலன்;
-
அணித்து – அருகில்.
-
தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத;
-
யாண்டும் – எப்பொழுதும்.
-
மூவாது - முதுமை அடையாமல்;
-
நாறுவ- முளைப்ப,
-
தாவா - கெடாதிருத்தல்
-
கோர்வை/கோவை : கோ என்பது
வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான் -
மைவனம் – மலைநெல்;
-
முருகியம்- குறிஞ்சிப்பறை;
-
பூஞ்சினை-பூக்களை உடைய கிளை;
-
சிறை- இறகு;
-
சாந்தம் - சந்தனம்
-
பூவை- நாகணவாய்ப் பறவை;
-
பொலம்- அழகு;
-
கடறு- காடு;
-
முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
-
பொலி- தானியக்குவியல்;
-
உழை- ஒரு வகை மான்.
-
வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்;
-
குருளை- குட்டி;
-
இனைந்து- துன்புறுதல்;
-
உயங்குதல்- வருந்துதல்.
-
படிக்குஉற- நிலத்தில் விழ;
-
கோடு- கொம்பு
-
கல்-மலை;
-
முருகு- தேன்,
-
மணம் - அழகு;
-
மல்லல்- வளம்;
-
கரிக்குருத்து- யானைத்தந்தம்;
-
புரைதப- குற்றமின்றி.
-
துவரை-பவளம்;
-
மரை- தாமரை மலர்;
-
விசும்பு- வானம்;
-
மதியம்-நிலவு.
-
தீபம் – விளக்கு;
-
சதிர் – நடனம்;
-
தாமம் - மாலை
-
தெங்கு – தேங்காய்
-
இசை – புகழ்
-
வருக்கை – பலாப்பழம்
-
நெற்றி - உச்சி
-
மால்வரை – பெரியமலை
-
மடுத்து – பாய்ந்து;
-
கொழுநிதி - திரண்ட நிதி
-
மருப்பு – கொம்பு
-
வெறி – மணம்
-
கழனி – வயல்
-
செறி – சிறந்த
-
இரிய - ஓட
-
சூல் – கரு
-
அடிசில் - சோறு
-
மடிவு – சோம்பல்
-
கொடியனார் - மகளிர்
-
நற்றவம் – பெருந்தவம்
-
வட்டம் - எல்லை
-
வெற்றம் - வெற்றி
-
அள்ளல் – சேறு;
-
பழனம் – நீர் மிக்க வயல்;
-
வெரீஇ – அஞ்சி;
-
பார்ப்பு – குஞ்சு.
-
நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து;
-
இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்.
-
நந்து – சங்கு;
-
கமுகு – பாக்கு.
-
முத்தம் - முத்து
-
புரிசை - மதில்;
-
அணங்கு - தெய்வம்;
-
சில்காற்று - தென்றல்;
-
புழை - சாளரம்;
-
மாகால் - பெருங்காற்று;
-
முந்நீர் - கடல்;
-
பணை - முரசு;
-
கயம் - நீர்நிலை;
-
ஓவு - ஓவியம்;
-
நியமம் - அங்காடி.
-
விண் – வானம்;
-
ரவி – கதிரவன்
-
நசை-விருப்பம்;
-
நல்கல் -வழங்குதல்;
-
பிடி-பெண்யானை;
-
வேழம் –ஆண்யானை;
-
யா-ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது;
-
பொளிக்கும் –உரிக்கும்;
-
ஆறு-வழி
-
வண்மொழி – வளமிக்கமொழி
-
வைப்பு – நிலப்பகுதி
-
இசை – புகழ்
-
சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
-
தொல்லை – பழமை, துன்பம்
-
மரபு – வழக்கம்
-
மயக்கம் - கலவை
-
திரிதல் – மாறுபடுதல்
-
இருதிணை – உயர்திணை, அஃறிணை
-
வழாஅமை – தவறாமை
-
தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
-
ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
-
தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
-
முழவு – இசைக்கருவி
-
செஞ்சொல் – திருந்திய சொல்
-
வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
-
வின்னம் - சேதம்
-
கெடிகலங்கி - மிக வருந்தி
-
வாகு - சரியாக
-
சம்பிரமுடன் - முறையாக
-
சேகரம் - கூட்டம்
-
மெத்த - மிகவும்
-
காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
-
தீர்வன - நீங்குபவை
-
திறத்தன - தன்மையுடையன
-
உவசமம் - அடங்கி இருத்தல்
-
கூற்றவா - பிரிவுகளாக
-
நிழல்இகழும் - ஒளிபொருந்திய
-
பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே
-
பேர்தற்கு - அகற்றுவதற்கு
-
பிணி - துன்பம்
-
திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
-
ஓர்தல் - நல்லறிவு
-
தெளிவு - நற்காட்சி
-
பிறவார் - பிறக்கமாட்டார்
-
நித்தம் நித்தம் - நாள்தோறும்
-
மட்டு - அளவு
-
பேணுவையேல் - பாதுகாத்தால்
-
சுண்ட - நன்கு
-
திட்டுமுட்டு - தடுமாற்றம்
-
கலன் – அணிகலன்
-
முற்ற – ஒளிர
-
தடம் - அடையாளம்
-
அகம்பாவம் - செருக்கு
-
அலந்தவர் - வறியவர்
-
கிளை – உறவினர்
-
செறாஅமை - வெறுக்காமை
-
பேதையார் – அறிவற்றவர்
-
நோன்றல் – பொறுத்தல்
-
மறா அமை - மறவாமை
-
போற்றார் – பகைவர்
-
பொறை - பொறுமை
-
வாரி - வருவாய்
-
எஞ்சாமை - குறைவின்றி
-
முட்டாது - தட்டுப்பாடின்றி
-
ஒட்டாது – வாட்டம்இன்றி
-
வைகுக - தங்குக
-
ஓதை - ஓசை
-
வெரீஇ - அஞ்சி
-
யாணர் - புதுவருவாய்
-
மறலி - காலன்
-
வழிவர் - நழுவி ஓடுவர்
-
கரி - யானை
-
பிலம் - மலைக்குகை
-
தூறு - புதர்
-
மண்டுதல் - நெருங்குதல்
-
அருவர் - தமிழர்
-
இறைஞ்சினர் - வணங்கினர்
-
உடன்றன - சினந்து எழுந்தன
-
முழை - மலைக்குகை
-
சீவன் – உயிர்
-
வையம் – உலகம்
-
சத்தியம் - உண்மை
-
சபதம் – சூளுரை
-
ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
-
மோகித்து – விரும்பி
-
நமன் – எமன்
-
நாணாமே – கூசாமல்
-
சித்தம் – உள்ளம்
-
உய்ம்மின் – ஈடேறுங்கள்
-
நம்பர் – அடியார்
-
ஈயில் - வழங்கினால்
-
படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
-
பகராய் - தருவாய்
-
பராபரம் – மேலான பொருள்
-
ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
-
அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
-
நிறை - மேன்மை
-
அழுக்காறு - பொறாமை
-
பொறை - பொறுமை
-
மதம் - கொள்கை
-
பொச்சாப்பு - சோர்வு
-
இகல் - பகை
-
மையல் - விருப்பம்
-
மன்னும் - நிலைபெற்ற
-
ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்
-
திங்கள் - நிலவு
-
கொங்கு - மகரந்தம்
-
அலர் - மலர்தல்
-
திகிரி - ஆணைச்சக்கரம்
-
பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
-
மேரு - இமயமலை
-
நாமநீர் - அச்சம் தரும் கடல்
-
அளி - கருணை
-
நிருமித்த - உருவாக்கிய
-
விளைவு - விளைச்சல்
-
சமூகம் - மக்கள் குழு
-
அசதி - சோர்வு
-
ஆழி பெருக்கு - கடல் கோள்
-
மேதினி - உலகம்
-
ஊழி - நீண்டதொரு காலப் பகுதி
-
உள்ளப்பூட்டு - அறியவிரும்பாமை
-
ஔடதம் - மருந்து
-
மாசற - குறை இல்லாமல்
-
சீர்தூக்கின் ஒப்பிட்டு ஆராய்ந்து
-
மாற்றார் - மற்றவர்
-
நெறி - வழி
-
வற்றாமல் - அழியாமல்
-
ஒப்புரவு - உதவி செய்தல்
-
நட்டல் - நட்புக் கொள்ளுதல்
-
இழைத்து-பதித்து
-
முத்தேன் கொசுத்தேன் கொம்புத்தேன், பொந்துத்தேன்,
-
மல்லெடுத்த - வலிமை பெற்ற
-
சமர் - போர்
-
நல்கும் - தரும்
-
கழனி - வயல்
-
மறம் - வீரம்
-
எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
-
கலம் - கப்பல்
-
ஆழி - கடல்
-
கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
-
மின்னல் வரி - மின்னல் கோடுகள்
-
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துக்கள்
-
தண்டருள் - குளிர்ந்த கருணை
-
கூர் - மிகுதி
-
செம்மையருக்கு சான்றோருக்கு
-
ஏவல் - தொண்டு
-
பராபரமே - மேலான பொருளே
-
பணி - தொண்டு
-
எய்தும் - கிடைக்கும்
-
சுயம் - தனித்தன்மை
-
நீள்நிலம் - பரந்த உலகம்
-
முற்றும் - முழுவதும்
-
மாரி - மழை
-
கும்பி - வயிறு
-
ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
-
குறி- குறிக்கோள்
-
விரதம் - நோன்பு
-
பொழிகிற தருகின்ற
-
நெறி - வழி
-
ஒப்புமை - இணை
-
அற்புதம் - விந்தை
-
உபகாரி - வள்ளல்
-
ஈன்று பெற்று
-
நச்சரவம்-விடமுள்ள பாம்பு
-
பரவசம் - மகிழ்ச்சிப்பெருக்கு
-
துஷ்டிகேட்டல் - துக்கம் விசாரித்தல்
-
சிற்றில் - சிறு வீடு
-
யாண்டு - எங்கே
-
கல் அளை - கற்குகை
-
ஈன்ற வயிறு பெற்றெடுத்த வயிறு
-
சூரன் - வீரன்
-
சாஸ்தி - மிகுதி
-
விஸ்தாரம் - பெரும்பரப்பு
-
வாரணம் -யானை
-
சிங்காரம் அழகு
-
கமுகு - பாக்கு
-
ஞெகிழி - தீச்சுடர்
-
அழுவம் - கடல்
-
சென்னி -உச்சி
-
உரவுநீர் பெருநீர்ப் பரப்பு
-
கரையும் - அழைக்கும்
-
வேயாமாடம் - வைக்கோலால் வேயப்படுவது
-
அழுவம் - கடல்
-
தூண் - மதலை
-
உரு-அழகு
-
போழ -பிளக்க
-
வங்கூழ் - காற்று
-
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
-
வங்கம் - கப்பல்
-
எல் -பகல்
-
அல் - இரவு
-
கோடு உயர் - கரை உயர்ந்த
-
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
-
எத்தனிக்கும் - முயலும்
-
வெற்பு -மலை
-
அன்னதோர்-அப்படி ஒரு
-
வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
-
கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
-
வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
-
விச்சை - கல்வி
-
பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
-
வனப்பு - அழகு
-
நெடி-நாற்றம்
-
பூரிப்பு - மகிழ்ச்சி
-
வண்கீரை- வளமான கீரை
-
முட்டப்போய் - முழுதாகச் சென்று
-
கால் -வாய்க்கால், குதிரையின் கால்
-
மறித்தல் தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திக் கட்டுதல்), தடுத்துத் தாக்குதல் எதிரிகளைத்
-
மடமகள்-இளமகள்
-
வறந்திருந்த - வறண்டிருந்த
-
புகவா -உணவாக
-
முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்னை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.
-
குழி - நில அளவைப் பெயர்
-
சாண் - நீட்டல் அளவைப் பெயர்
-
மணி - முற்றிய நெல்
-
சும்மாடு பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
-
சீலை -புடவை
-
மடை-வயலுக்கு வரும் நீர்வழி
-
கழலுதல் - உதிர்தல்
-
வெய்ய - வெப்பக் கதிர்வீசும்
-
சுடர் அழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
-
இடர்ஆழி - துன்பக்கடல்
-
சொல் மாலை பாமாலை
-
ஈன - பெற
-
நிலன் -நிலம்
-
களை - வேண்டாத செடி
-
பைங்கூழ் - பசுமையான பயிர்
-
வன்சொல்-கடுஞ்சொல்
-
தாரணி - உலகம்
-
தத்துவம் - உண்மை
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்:
கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்
-
குறம், பள்ளு - சிற்றிலக்கிய வகைகள்;
-
மூன்றினம் - துறை, தாழிசை, விருத்தம் ;-
-
முக்குணம்
- சத்துவம் - அமைதி, மேன்மை
- இராசசம் - போர், தீவிரமான
- தாமசம்- சோம்பல், தாழ்மை-
-
பத்துக்குணம் - செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்
-
வண்ணங்கள் ஐந்து - வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை
-
வண்ணம்நூறு - குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
-
நவரசம் - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை;
ஐம்பெருங்குழு
- அமைச்சர்
- சடங்கு செய்விப்போர்
- படைத்தலைவர்
- தூதர்
- சாரணர் (ஒற்றர்)
எண்பேராயம்
- கரணத்தியலவர்
- கரும விதிகள்
- கனகச்சுற்றம்
- கடைக்காப்பாளர்
- நகரமாந்தர்
- படைத்தலைவர்
- யானை வீரர்
- இவுளி மறவர்